கோவை : கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி பேசியதாவது : கோவை மாவட்டம் சூலூர் அருகே கணியூர், பதுவம்பள்ளி, மாதப்பூர் முத்து கவுண்டன்புதூர் போன்ற கிராம பஞ்சாயத்துக்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிமை பெறாமல் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இதனால் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மாசடைவது உடன், காற்று மாசுபடுகிறது. உடனடியாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளிபாளையம், சிறுமுகை – அன்னூர் செல்லும் பாதையில் அனுமதியற்ற முறையில் கனிமவளத் துறை மூலம் முறையான அனுமதி பெறாமல் கனிம வளங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு மிக முக்கியமான நீர் ஆதாரமாக நொய்யல் ஆறு உள்ளது. இந்த ஆற்றை அளவீடு செய்து முட்புதர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கருவேப்பிலை குறித்து வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. கோவை மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவிற்கு மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் கருவேப்பிலை விவசாயம் செய்து வருகின்றனர். எனவே கோவை மாவட்டத்தில் கருவேப்பிலை மையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.