திருப்பூர் : தனியார் மருத்துவமனையில் ஒருவருட லேப் டெக்னிசியன் படிப்பு முடித்து விட்டு பொது மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து கைகாட்டிப்புதூரில் கே. எஸ். கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அவிநாசி பகுதியை சேர்ந்த சுதா என்பவருக்கு சொந்தமான இந்த மருத்துவமனையில் புதுக்கோட்டை மாவட்டம், சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி என்பவரின் மகன் ஜெயக்குமார் (வயது 44), நோயாளிகளுக்கு பொது மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
ஒரு வருட லேப் டெக்னிசியன் படிப்பு மட்டுமே படித்த இவர் பொது மருந்துவம் பார்ப்பதாக வந்த புகாரை அடுத்து, வட்டார சுகாதார மேற்பார்வையாளர், வட்டார சுகாதார ஆய்வாளர், பொது மருத்துவ அலுவலர் ஆகியோர் இன்று மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், ஜெயக்குமார் போலி மருத்துவர் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவிநாசி போலீசார் போலி மருத்துவர் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
மேலும், அனுமதியின்றி இயக்கி வந்த மருத்துவ ஆய்வக கூடம் மற்றும் கிளினிக் இரண்டையும், வட்டாச்சியர் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.