திருப்பூர் : தாராபுரம் அருகே ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொளத்துப்பாளையம் ராஜ வீதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது 77). இவர் தனது வீட்டில் ஹோமியோபதி மருத்துவமனை என்ற பெயரில் அலோபதி மருத்துவம் பார்ப்பதாக தாராபுரம் அரசு தலைமை மருத்துவர் சிவபாலன்னுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தலைமை மருத்துவர் சிவபாலன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொளத்துப்பாளையம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஹோமியோபதி மருத்துவர்.ஜெயராஜ் அலோபதி மருந்துகளை பயன்படுத்தி மருத்துவம் பார்த்ததை கையும் களவுமாக பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. மருத்துவர் சிவபாலன் கொடுத்த புகாரின்பேரில் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு, ஆய்வாளர் மணிகண்டன், மற்றும் போலீசார் ஜெயராஜை கைது செய்து அவரிடமிருந்து அலோபதி மருந்துகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.