திண்டுக்கல் : பழனி அருகே போலி இரிடியத்தை கடத்தி சென்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி வழியாக காரில் போலி இரிடியம் கடத்தி செல்வதாக போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு மற்றும் பழனி தாலுகா போலீஸார் இணைந்து பழனி அருகே வண்டிவாய்க்கால் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உடுமலையில் இருந்து பழனி நோக்கி வந்த காரை மறித்து, அதில் வந்தவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது காரில் இருந்த 6 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்ததில், இரிடியம் போன்ற உலோகம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீசார், 6 பேரையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சையது இப்ராகீம் (27), செல்வகுமார் (31), சுந்தரராஜ் (26), விக்னேஷ் (32), அபுதாகீர் (30) மற்றும் குமரலிங்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (52) ஆகிய 6 பேரும் இரிடியம் விற்பனை செய்து வருவதும், தற்போது போலி இரிடியம் ஒன்றை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
தற்போது , விற்பனைக்காக உடுமலையில் இருந்து போலி இரிடியத்தை காரில் கடத்தி சென்ற போது கையும் களவுமாக சிக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த போலி இரிடியம் மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதற்கு முன்பு இவர்கள் இதுபோல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.