திண்டுக்கல் : பழனி அருகே போலி இரிடியத்தை கடத்தி சென்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி வழியாக காரில் போலி இரிடியம் கடத்தி செல்வதாக போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு மற்றும் பழனி தாலுகா போலீஸார் இணைந்து பழனி அருகே வண்டிவாய்க்கால் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உடுமலையில் இருந்து பழனி நோக்கி வந்த காரை மறித்து, அதில் வந்தவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது காரில் இருந்த 6 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்ததில், இரிடியம் போன்ற உலோகம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீசார், 6 பேரையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சையது இப்ராகீம் (27), செல்வகுமார் (31), சுந்தரராஜ் (26), விக்னேஷ் (32), அபுதாகீர் (30) மற்றும் குமரலிங்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (52) ஆகிய 6 பேரும் இரிடியம் விற்பனை செய்து வருவதும், தற்போது போலி இரிடியம் ஒன்றை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
தற்போது , விற்பனைக்காக உடுமலையில் இருந்து போலி இரிடியத்தை காரில் கடத்தி சென்ற போது கையும் களவுமாக சிக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த போலி இரிடியம் மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதற்கு முன்பு இவர்கள் இதுபோல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.