கோவையில் போலி மதுபானம் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே போலி மதுபானம் தயாரிப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் தொட்டிப்பாளையம் பகுதியில் போலீஸ் நேரடியாக ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் போலி மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த அருண் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயாரித்தது தெரியவந்துள்ளது. அவர்களை போலீஸ் கைது செய்துள்ளனர்.
இவர்கள் கேரளாவில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்து, வேதிப்பொருள்கள் கலந்து வீட்டில் மதுபானம் தயாரித்துள்ளனர். தயாரிக்கப்பட்ட மதுபானத்தை பாட்டிலில் ஊற்றி பிரபல நிறுவனங்களின் லேபிள்களை ஒட்டியுள்ளனர். பிறகு இதை கேரளாவுக்கு சென்று விற்றுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 1,667 மதுபாட்டில்கள், நிரப்பப்படாத பாட்டில்கள் 1,745 மற்றும் எரிசாராயம் 180 லிட்டர், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவர்களுக்கு தலைவனாக செயல்பட்டு வரும் அனில்குமார் என்பவரை போலீஸ் தேடி வருகின்றனர்.
மேலும் காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக போலி மதுபானம் விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கோவில்பாளையம் – காரமடை சாலை அருகே எழில் ரெஸ்டாரன்டில் போலி மதுபானம் விற்பனை செய்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.