தமிழகம்

தூத்துக்குடியில் 20 ஏக்கர் நிலம்.. விருதுநகரில் 11 வீடுகள்.. முள் படுக்கை சாமியார் சிக்கியது எப்படி?

தூத்துக்குடியில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி ஏமாற்றிய போலி சாமியாரையும், அவரது மகனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ் (42). இவர் சாமி அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரிடம் பால சுப்பிரமணியன் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது, தான் அருள்வாக்கு கூறுவதாகவும், புங்கவர் நத்தத்தில் உள்ள கோயிலில் விஷேச பூஜை செய்து பணத்தை இருமடங்காக கொடுத்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

இதனை நம்பிய லிங்கராஜ், பால சுப்பிரமணியனிடம் சிறப்பு பூஜை செய்வதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2024 வரை பல்வேறு தவணைகளாக 38 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதேபோல், லிங்கராஜின் நண்பர் ஆனந்தகுமார் என்பவரும் ரூ.29 லட்சத்தை பால சுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளார். பின்னர் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தாரை லிங்கராஜ் செல்போனில் தொடர்பு கொண்டபோது, மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு அனைவரும் தலைமறைவாகியது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அவரது ஊருக்கு லிங்கராஜ் சென்றுள்ளார். அப்போதுதான், பால சுப்பிரமணியன் பலரிடம் ஏமாற்றி பணம் சுருட்டியது தெரியவந்திருக்கிறது. இதற்கு, பால சுப்பிரமணியனின் மகன் ஐயாத்துரை மூளையாகச் செயல்பட்டுள்ளார் என்பதும், உள்ளூரில் 19 ஏக்கர் நிலம் மற்றும் 30 லட்சம் மதிப்பில் வீடு உள்ளதாகவும் கூறப்படுகிறது.அது மட்டுமல்லாமல், ஏற்கனவே இரண்டு திருமணம் முடித்துள்ள பால சுப்பிரமணியன், விருதுநகரில் உள்ள ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: அஜித் வெற்றிக்கு.. ‘பிறகு நான் காரி துப்புவேன்’.. கடுப்பான அண்ணாமலை!

மேலும், அதே பகுதியில் 11 வீடுகளைக் கட்டியுள்ளதும், இந்த வீடுகளை அந்த பெண்ணே பராமரித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, போலி சாமியாரையும், அவரது மகனையும் ஓசூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தன்னை சாமியார் என நம்ப வைப்பதற்காக முள்படுக்கையில் குதித்து, குறி சொல்வதை வழக்கமாக கொண்டவராக பால சுப்பிரமணியன் இருந்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

2 minutes ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

13 minutes ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

59 minutes ago

எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு

வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…

1 hour ago

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

2 hours ago

This website uses cookies.