போரூரில் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் கஞ்சா எடுத்து செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து போரூர் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் போரூரில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை மடக்கி சோதனை செய்தபோது பத்திரிகையாளர்கள் என்று தெரிவித்தனர்.
இருப்பினும் போலீசார் விடாமல் அவர்களிடம் விசாரித்த போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் துருவி, துருவி விசாரணை செய்து சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது இதனால் உடன் வந்த ஒருவர் தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரித்தபோது சூர்யா (வயது 30), பிரவீன் (வயது 29), என்பதும் இவர்களிடமிருந்து 3 1/2 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் பத்திரிகையாளர் என வைத்திருந்த அடையாள அட்டைகளை பறிமுதல் செய்து விசாரித்த போது போலீசார் அனைத்து வாகனங்களையும் மடக்குவதாகவும் பத்திரிகையாளர்களின் வாகனங்களை மட்டும் மடக்காமல் இருப்பதால் பத்திரிகையாளர்கள் போன்று அடையாள அட்டைகளை அடித்து கொடுத்து மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை எடுத்து சென்று சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் இதில் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகின்றனர். பத்திரிகையாளர்கள் போன்று அடையாள அட்டை வைத்து கொண்டு கெஞ்ச விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
This website uses cookies.