தென்காசி: குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கற்கள் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மே மாத இறுதியில் சீசன் துவங்கியுள்ள நிலையில், தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழையும் கன மழையும் பெய்து வருவதால் அவ்வப்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றால அருவி, பிரதான அருவி ஆகியவற்றில் அதிகப்படியான தண்ணீர் வரத்து இருக்கிறது.
இதையடுத்து காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. சாரல் மழையோடு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தண்ணீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக சிறு கற்கள் மணல் என அருவிகளில் விழத்துவஙகியது.
இதனால் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அருவிகளில் தண்னீர் குறையும்போது மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படும் நிலை வருவாகியுள்ளது
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.