கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவரை மனைவி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் இந்திரா நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராணுவ வீரர் நரேஷ்குமார் (39). இவருக்கு அதே பகுதியை சேரந்த சசிகலாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு சசிகலாவின் தந்தை மகாலிங்கத்தை நரேஷ்குமார் கொன்றதாக வழக்கு உள்ள நிலையில், கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று சசிகலாவை சமாதானப்பத்தி வீட்டிற்கு வர அழைத்து வர நரேஷ்குமார் சென்றுள்ளார். அப்போது இருவருக்கு இடையோ நடந்த பேச்சுவார்த்தை கைகலப்பாக மாறியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சசிகலா நரேஷ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் ஆங்கேயே சரிந்து விழுந்துள்ளார். மேலும் ஆத்திரம் தீராத சசிகலா அருகே கிடந்த கல்லைக் கொண்டும் தாக்கியுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் நரேஷ்குமாரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் கணவர் தாக்கியதில் இடுப்பில் காயமடைந்த சசிகலா போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வைரலாகும் செல்வராகவனின் இன்ஸ்டா வீடியோ நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் பயங்கர ஹிட் அடித்து வசூல்…
சைந்தவிக்கு எப்போதும் நல்ல மனசுங்க இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் ஜி வி பிரகாஷ்,இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் 'கிங்ஸ்டன்'…
நடிகர் பாண்டியன் இறப்பின் கொடூர பின்னணி தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் பாண்டியன்,இவர்…
சென்னையில் பிரபல சினிமா பட இயக்குநருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதகாரிகள் அதிரடியாக முடக்கியுள்ளனர். ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ்…
இயக்குனராகும் டைட்டானிக் பட ஹீரோயின் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கிய திரைப்படம் டைட்டானிக். ஒரு கப்பலில்…
நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என பிரபல நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில்…
This website uses cookies.