Categories: தமிழகம்

சொத்துக்காக சொந்த தம்பி மற்றும் மகனை கொலை செய்த கொலைகார குடும்பம் : இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

திருச்சி : சொத்து தகராறில் சித்தப்பாவையும் அவரது மகனையும் அடித்துக் கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், கல்லக்குடி அடுத்துள்ள வெங்கடாசலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (வயது 69). இவரது அண்ணன் அரோக்கியசாமி. இவர்கள் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதில் பலமுறை இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக கல்லக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஆரோக்கியசாமி அவரது மகன் சசிகுமார், அவரது மனைவி தனமேரி ஆகிய மூவரும் சேர்ந்து தனிஸ்லாஸ் மற்றும் அவரது மகனான நெப்போலியன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆரோக்கியசாமி மகன் மற்றும் மனைவி ஆகிய மூவரும் சேர்ந்து தனிஸ்லாஸ் மற்றும் அவரது மகன் நெப்போலியனை சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

இதுதொடர்பான கல்லக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து இன்று நீதிபதி தங்கவேல் தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட ஆரோக்கியசாமி மகன் சசிகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஒரு வருடம் சிறை தண்டனையும், ஆரோக்கியசாமிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், ஆரோக்கியசாமியின் மனைவி தனமேரிக்கு ஒரு வருட சிறை தண்டனையும் ரூபாய் 5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதறை தொடர்ந்து சசிகுமார் மற்றும் ஆரோக்கியசாமி இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தனமேரியை திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

6 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

8 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

8 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

9 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

10 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

11 hours ago

This website uses cookies.