நாட்றம்பள்ளி அருகே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி, தாயுடன் சேர்ந்து கணவனின் இருசக்கர வாகனத்தை மண்ணினை ஊற்றி தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னகம்மியம்பட்டு பகுதி சேர்ந்த வெங்கடேசன் மகன் முத்துக்குமார் (36). இவருக்கும் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகள் சசிகலா (30) என்ற பெண்ணுடன் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3ஆண் பிள்ளைகள் உள்ளன.
மேலும் படிக்க: அடக்குமுறையை ஏவி தடுக்க நினைப்பதா..? மக்களாட்சித் தத்துவத்திற்கு மாபெரும் கொடுமை : சீமான் ஆவேசம்!!
கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டதால், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சண்டை போட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு சசிகலா சென்றுள்ளார். இந்த நிலையில், தனது மனைவியை அழைத்து வர மாமியார் வீட்டிற்கு சென்று, முத்துக்குமார் தனது மனைவி சசிகலாவை வீட்டிற்கு அழைத்து உள்ளார்.
அப்போது, திரும்பவும் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சசிகலா மற்றும் அவரின் தாயாரான சின்ன பாப்பா ஆகிய இருவரும் சேர்ந்து முத்துகுமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தி உள்ளனர். இதில், பைக் முழுவதும் தீக்கிரையானது.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த முத்துக்குமார் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.