மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மஞ்சு வாரியர். 1998 ஆண்டு நடிகர் திலீப்பைத் திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். பின்னர் 2014ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே விவாகரத்து ஆனது. இதையடுத்து மீண்டும் சினிமாவுக்கு நடிக்க வந்த அவர் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ எனும் படம் வாயிலாக கம்பேக் கொடுத்தார்.
சினிமாவில் மஞ்சு வாரியரின் இரண்டாவது இன்னிங்ஸ் பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து படங்களில் நடித்துவரும் அவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் வாயிலாக தமிழிலும் அறிமுகமானார். இப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் பற்றி தகவல் ஒன்று சினிமா உலகில் தற்போது வலம்வந்துகொண்டிருக்கிறது.
ஃபேஸ்புக்கில் இது தொடர்பாகத் தெரிவித்துள்ள பிரபல மலையாள இயக்குநரான சனல்குமார் சசிதரன், நடிகை மஞ்சு வாரியர், சிலரின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், இது பற்றி நான் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பல நாட்கள் ஆகியும் பதில் வரவில்லை. அவரது மேனேஜர்கள் பெயரையும், அவர் கடத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தையும் தெரிவித்தேன். ஆனால் தற்போது வரை ரெஸ்பான்ஸ் இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார். இயக்குனரின் இந்த பதிவு மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.