அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து, ரஜினி நடிக்க இருக்கும் திரைப்படம் “தலைவர்169”. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இப்படம் உருவாகவிருக்கிறது.
பீஸ்ட் பட தோல்வியினால் வேறு இயக்குனர் படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில், நெல்சன் தான் படத்தை இயக்கப்போகிறார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் ஜூலை அல்லது ஆகஸ்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
கதைப்படி இப்படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் ரஜினியுடன் நடிக்கின்றனர் என தகவல் வெளியானது. அதன்படி, ஹீரோயினாக ஐஸ்வர்யா ராய், ரஜினிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணனும், மகளாக அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவலும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன.
அந்த வகையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க முயற்சித்து வந்த நிலையில், அவர் நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் வேறு ஹீரோயினை இயக்குனர் நெல்சன் தேடி வருவதாக கூறப்படுகிறது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.