விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நயன்தாரா நடித்த கண்மணி கதாபாத்திரத்தை விட ரசிகர்களுக்கு கதீஜாவாக நடித்த சமந்தாவின் கதாபாத்திரம் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்துத. இப்படத்தில் தன்னுடைய கவர்ச்சி மற்றும் சிறந்த நடிப்பின் மூலம் சினிமா ரசிகர்களை ரசிக்க வைத்தார் சமந்தா. இந்த நிலையில், இந்த படத்தில் கதீஜாவாக நடிக்க முதலில் திரிஷா தான் ஒப்பந்தமாகி உள்ளார். ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காததால் படத்தின் சூட்டிங் பல நாட்கள் தள்ளிப்போனதாகவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
அதன் பிறகு நயன்தாரா, சமந்தாவிடம் பேசி இப்படத்திற்கு ஒப்பந்தம் வாங்கினாரம். மேலும் சமந்தா தனது ஒத்துழைப்பை கொடுத்து நன்றாக அந்த கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்தார் என ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் சமந்தாவை பற்றி கூறியிருந்தார். ஆனால் இவர் சொல்றது நம்புற மாதிரியா இருக்கு என ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
அதாவது சமந்தா தற்போது படு பிசியான நடிகை. ஆனால் திரிஷாவுக்கு தற்போது அதிக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் சமந்தாவை விட திரிஷா பிஸியாகவா இருக்க போறாங்க என்னப்பா இது புது கதையா இருக்கு என ரசிகர்கள் விக்னேஷ் சிவனை விமர்சித்து வருகின்றனர்.
பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…
லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
This website uses cookies.