கோவை: துடியலூர் அருகே தொழில் அதிபரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 15 பவுன் தங்க நகைகளை மற்றும் அமெரிக்க டாலர்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கோவை துடியலூர் அடுத்த கதிர்நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 43). தொழிலதிபரான இவர் கடந்த 18ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் அரித்துவாரமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுப்பதற்காக இவர் தனது மனைவி குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
அதனையடுத்து இன்று அதிகாலை 12.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்பொழுது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிகள் கலைந்து கிடந்தன.
மேலும் பீரோவில் வைத்திருந்த தங்க மோதிரம், வளையல், கம்மல், செயின் உள்ளிட்ட 15 பவுன் தங்க நகைகள், அமெரிக்கா டாலர்கள், லேப்டாப் ஆகியவை திருடப்பட்டு இருந்துள்ளன. தொடர்ந்து இவர் துடியலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
இதனையடுத்து துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேற்கொண்டு கைரேகை நிபுணர்களும் வந்து ஆய்வு வருகின்றனர். தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து அருகிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து சோதனை செய்து வருகின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.