கோவையில் தனியார் மருத்துவமனை சூறையாடிய வழக்கில் வக்கீலின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
கோவை – காந்திபுரம், நூறடி ரோட்டில் எல்லன் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன், 75 என்பவர் உள்ளார். இந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் வாடகைக்கு எடுத்தார்.
இதனால் இம் மருத்துவ மனையின் பெயர் சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், 2017ம் ஆண்டு இந்த மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் தாக்குதல் நடத்தி, மருத்துவமனையை சூறையாடி சென்றது.
இதுதொடர்பாக போலீசார் – டாக்டர் உமாசங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் வாடகை கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், மருத்துவமனையை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் உமாசங்கர் – மருதவான் ஆகியோரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பின் ஜாமீனில் வெளியே வந்த உமாசங்கர் விபத்தில் பலியானார். இதற்கிடையே தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கு கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமச்சந்தின் உள்பட 13 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய வக்கீல் ராஜேந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த வாரம் சோதனையில் ஈடுபட்டனர்.
ராஜேந்திரனிடம் மேலாளராக பணிபுரிந்த பிரபு, என்பவர் கேரளா, கொச்சியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொச்சி சென்று, பிரபுவை கைது செய்து விசாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.