விருதுநகரைச் சேர்ந்த முருக லட்சுமி என்பவர் வரிச்சூர் செல்வத்தின் கூட்டாளியான தனது கணவர் செந்திலை காணவில்லை என விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புகார் செய்திருந்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் செந்திலின் செல்போன் கடைசி அழைப்புகளை கொண்டு போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
அவருடைய கடைசி அழைப்புகளை கண்டறிந்தனர். அதன்படி வரிச்சூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளியுடன் தொடர்பு கொண்டு வந்தது தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து அருப்புக்கோட்டை ஏஎஸ்பி வருண்காரன் தலைமையில் ஆன போலீசார் மதுரையில் வைத்து வரிச்சூர் செல்வத்தை பிடித்து விசாரணை செய்தனர்
மேலும் சென்னையில் வைத்து வரிச்சூர் செல்வம் தனது கூட்டாளிகளை சேர்த்து செந்திலை கொலை செய்ததாகவும் விசாரணையில் ஒப்புக் கொண்டதாக தெரிய வருகிறது.
இதற்கிடையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் மீண்டும் செந்தில் அவருடன் இணைந்துள்ளார். அச்சமயத்தில் அவரை சென்னையில் வைத்து கொலை செய்திருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் வரிச்சிர் செல்வம் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சாத்தூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தவுள்ளனர்.
தேர்தலை சந்திக்கப்போகும் விஜய் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் ஜூன்…
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு HRWF பவுண்டேஷன் என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக "மகுடம்" விருதுகள் (2025) வழங்கும் விழா சென்னை…
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
This website uses cookies.