விபத்தில் பலியான ரசிகர்களுக்கு இதுவரை விஜய் இரங்கல் தெரிவிக்காதது ஏன் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்.
விஜயின் தமிழக வெற்றி கழக மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் அவரது கட்சியினரும் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்சியினர் பேருந்து, வேன் கார்களின் சென்றனர்.
மாநாடு முடிந்து திரும்பிக் கொண்டிருந்த பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்த திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும் உறையூர் பகுதியை சேர்ந்த இளைஞர் அணி துணைச் செயலாளர் கலை ஆகியோர் விழுப்புரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் பலியாகினர்.
அவர்கள் இருவரது உடலும் திருச்சி கொண்டுவரப்பட்டது. அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்லி.ஆனந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே இறுதி மரியாதை செலுத்த வந்த விஜய் ரசிகர்கள் இதுவரை நடிகர் விஜய் எந்தவித வருத்தம் தெரிவித்தும் அறிக்கை கொடுக்கவில்லை மரியாதை செலுத்த அவர் வரமாட்டாரா எனவும் ஆவேசமாக கட்சியினர் பேச ஆரம்பித்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என விஜய் கூறியதால்தான் நான் இங்கு வந்தேன் எனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தை கட்சி பார்த்துக் கொள்ளும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
This website uses cookies.