ராமநாதபுரத்தில் சென்று கொண்டிருந்த ரயிலின் பிரேக் ஷூ கழன்று விழுந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேலு. 61 வயதான இவர், இன்று காலை 7.35 மணியளவில் தனது கிராமத்தில் விவசாயப் பணிக்காக ரயில் தண்டவாளம் அருகே சென்று கொண்டிருந்து உள்ளார்.
அப்போது அந்த வழியே ராமநாதபுரம் – மதுரை செல்லும் பயணிகள் ரயில் வேகமாக சென்று உள்ளது. அப்போது அதில் இருந்து, இரும்பு பிரேக் ஷூ ஒன்று கழன்று சண்முகவேலின் முகத்தில் பலமாக அடித்து உள்ளது.
இதில் பலத்த காயமடைந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் ரயில்வே போலீசார், உயிரிழந்த சண்முகவேல் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: லாரிக்கு அடியில் புகுந்த கார் : கண்ணிமைக்கும் நேரத்தில் கோரம் : நொடியில் பலியான 6 பேர்!
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், இந்தச் சம்பவத்தால் ரயிலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், ரயில் நிற்காமல் சென்றுவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.