ஆண்டிப்பட்டி அருகே தந்தை சொத்து பிரித்ததில் பாகுபாடு கட்டியதாக கூறி விவசாயி குழிக்குள் இறங்கி மண்ணை போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காஜாமைதீன். இவருக்கு முகமது சுல்தான், முகமது சொகையில் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்தவரான முகமது சுல்தான் அடைக்கப்பட்டியில் விவசாயம் செய்து வருகிறார். இளையமகன் முகமது சொகையில் போடியில் பால் பண்ணை நடத்தி வருகிறார்.
காஜாமைதீனுக்கு அடைக்கப்பட்டி கிராமத்தில் 15 ஏக்கருக்கும் மேல் நிலங்கள் உள்ளது. இந்த சொத்துக்களை காஜாமைதீன் தனது இரண்டு மகன்களுக்கு பிரித்து வழங்கியுள்ளார். இதில் இளைய மகன் முகமது சொகையிலுக்கு மட்டும் அதிகமான மற்றும் அதிக மதிப்புடைய சொத்துக்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால், மூத்த மகன் முகமது சுல்தான் சொத்து பிரித்து வழங்கியதில் தந்தை பாகுபாடு காட்டியதாக கூறி அடைக்கப்பட்டியில் உள்ள அவரது நிலத்தில் ஆளுயுற குழிதோண்டி, அதில் இறங்கி மண்ணை போட்டு மூடி தற்கொலை செய்ய முயற்சி செய்தார். மேலும் தனது கையையும் கண்ணாடியால் கீறி கொண்டார்.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் கண்டமனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, அங்கு வந்த போலீசார் முகமது சுல்தானிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 மணிநேரத்திற்கும் மேலாக மண்ணில் இருந்ததாலும், அதிகமான ரத்தம் வெளியேறியதாலும் முகமது சுல்தான் மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து அவரை மீட்ட போலீசார் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்து பிரச்சனையால் விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.