நாகை அருகே மர்மமான முறையில் வயலில் இறந்து கிடந்த விவசாயி ; உடலை கைப்பற்றிய வேளாங்கண்ணி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள சின்னத்தும்பூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலமழை வடக்கு தெருவைச் சேர்ந்த லெனின் (42). இவர் தனது வயலில் சாகுபடி செய்துள்ள நெல் அறுவடை பணிக்காக அறுவடை இயந்திரத்தை அழைத்து வருவதாக கூறி வீட்டிலிருந்து நேற்று காலை 10 மணிக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், மனைவி மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வயலில், இரண்டு கால்களிலும் சிராய்ப்பு காயங்களுடன் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விவசாயி உயிரிழந்தது தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்தவருக்கு வேம்பு என்ற மனைவியும், பிரகதீஸ்வரன், ஜனனி என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.