கோவை: விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் கூடுதல் நிலத்தை மின்துறை கையகப்படுத்துவதாக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை: விவசாயிகளிடம் கருத்து கேட்காமலும் நஷ்ட ஈடு தராமலும் மின் கோபுரம் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்த மின்சாரத்துறை முயற்சித்து வருவதாக விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பழனிச்சாமி கூறுகையில், ஆனைமலை சுற்றுவட்டாரம் மற்றும் அங்கலக்குறிச்சி பகுதிகளில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரத்திற்கு இதுவரை மின்சாரத்துறை விவசாயிகளுக்கு எந்த நஷ்ட ஈடும் வழங்கவில்லை.
இதனிடையே கூடுதலாக 22 மீட்டர் அளவு விவசாய நிலத்தை கையகப்படுத்த மின்சாரத்துறை முயற்சித்து வருகிறது. விவசாய நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்காமலும், இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு நஷ்ட ஈடு தராமலும் மின்சார துறை அதிகாரிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
இதே போல் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பாசன சபை தேர்தல் நடந்தது. தற்போது இந்த தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முந்தைய உறுப்பினர்கள் பட்டியலை வைத்துக்கொண்டு தற்போது தேர்தல் நடத்துவது நியாயமாகாது. எனவே இந்த தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.