Categories: தமிழகம்

விவசாயிகளை வாழ விடு : தமிழக அரசுக்கு எதிராக அன்னூரில் விவசாயிகள் நடைபயணம்!!

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ மூலம் தொழில் பூங்கா அமைக்க 3862 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிர்ப்பு

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஒன்றியங்களை சேர்ந்த பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் நிலம் கையகப்படுத்த அரசு திட்டமிட்டது.

இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து “நமது நிலம் நமதே” என்ற பெயரில் போராட்டக் குழு தொடங்கி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் எதிரொலியாக விவசாய நிலங்களை விடுத்து தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்களான 1630 ஏக்கர் மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும் என்றும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும், நிலத்தடி நீர், காற்று மாசுப்படுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், தொழில் பூங்கா அமைக்கும் அரசாணையை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்தப்படும் என்றும், அன்னூர், மேட்டுப்பாளையம் வட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமெனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கோவை அன்னூர் செங்கப்பள்ளி முதல் வடக்கலூர் வரை தொழிற்பூங்காவிற்கான கையகப்படுத்தும் நிலம் அமைந்துள்ள ஊராட்சிகளில் நடைபயணம் மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

9 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

9 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

10 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

10 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

11 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

11 hours ago

This website uses cookies.