Categories: தமிழகம்

விவசாயிகளை வாழ விடு : தமிழக அரசுக்கு எதிராக அன்னூரில் விவசாயிகள் நடைபயணம்!!

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ மூலம் தொழில் பூங்கா அமைக்க 3862 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிர்ப்பு

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஒன்றியங்களை சேர்ந்த பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் நிலம் கையகப்படுத்த அரசு திட்டமிட்டது.

இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து “நமது நிலம் நமதே” என்ற பெயரில் போராட்டக் குழு தொடங்கி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் எதிரொலியாக விவசாய நிலங்களை விடுத்து தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்களான 1630 ஏக்கர் மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும் என்றும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும், நிலத்தடி நீர், காற்று மாசுப்படுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், தொழில் பூங்கா அமைக்கும் அரசாணையை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்தப்படும் என்றும், அன்னூர், மேட்டுப்பாளையம் வட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமெனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கோவை அன்னூர் செங்கப்பள்ளி முதல் வடக்கலூர் வரை தொழிற்பூங்காவிற்கான கையகப்படுத்தும் நிலம் அமைந்துள்ள ஊராட்சிகளில் நடைபயணம் மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

3 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

3 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

5 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

5 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

6 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

6 hours ago

This website uses cookies.