திருவள்ளூர் : பொன்னேரி அருகே இரண்டு நாட்கள் விடாத பெய்த கன மழையால்
500க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து கொண்டது. இதன் விளைவாக பல கிராமங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன.
குறிப்பாக, மேட்டுப்பாளையம், இலவம்பேடு, ஆவூர், மெதூர், கங்கானிமேடு ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. குறிப்பாக, ஆவூர் பகுதியில் தண்ணீர் செல்வதற்கு சரியான வழித்தடம் இல்லாததால் சுமார் மூன்று அடி தண்ணீரில் நெற்கதிர்கள் மூழ்கி காட்சியளிக்கின்றன.
அதேபோன்று, கங்கானிமேடு பகுதியில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. பார்ப்பதற்கு குளம் போல் காட்சி அளிக்கும் இந்த இடத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் செய்வதறியாமல் வேதனை அடைந்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.