தமிழகம்

8 மாத குழந்தைக்கு விஷம்.. தகாத உறவால் கொலைகாரனாக மாறிய தந்தை!

தென்காசி அருகே தனது 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமார் (37) – முருகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு 7 வயது மற்றும் 8 மாதம் நிறைவடைந்த இரு பெண் குழந்தைகள் உள்ளன. இதில், முத்துக்குமார் பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இதனிடையே, கடந்த சில மாதங்களாக தம்பதி இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார், தனது 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

அப்போது முருகேஸ்வரி, கணவரின் கையில் இருந்த விஷப் பாட்டிலை தட்டிவிட்டுள்ளார். பின்னர், குழந்தையை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சற்று தணிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக கரிவலம்வந்தநல்லூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், முத்துக்குமாருக்கு திருமணத்தை தாண்டிய உறவு இருந்து வந்ததாகவும், இதனை வைத்தே தம்பதி இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

Hariharasudhan R

Recent Posts

பவுலர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனே நீக்க வேண்டும்..ஐசிசி க்கு முகமது ஷமி கோரிக்கை.!

ரிவர்ஸ் ஸ்விங் சிக்கல் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது அபாரமான பந்து வீச்சால் அனைவரையும் ஈர்த்து…

30 seconds ago

செந்தில் பாலாஜியால் மீண்டும் திமுகவுக்கு சிக்கல்.. எம்பியும் சேர்ந்ததால் சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களின் இடங்கள் மற்றும் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி…

21 minutes ago

ஒரே இடத்தில் திமுக – பாஜகவினர் மாறி மாறி கோஷம்.. பரபரப்பில் சென்னை!

சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…

1 hour ago

அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!

பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…

2 hours ago

மும்மொழிக்கு ஆதரவு.. பயத்தில் நிலை தடுமாறும் முதலமைச்சர் : அண்ணாமலை அட்டாக்!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…

3 hours ago

This website uses cookies.