தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கவுரிசெட்டிபட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (37). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்த நிலையில் செல்வம் தனது மனைவி சித்ராவை விவாகரத்து செய்யக்கோரி கடந்த ஓராண்டுக்கு முன்பு கோர்ட்டில் மனு செய்தார். இதற்கிடையே செல்வம் தனது மனைவியின் சொந்த ஊரான பிக்கம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்றார்.
அப்போது அங்கு வந்த அவருடைய மனைவி சித்ரா, மாமனார் பழனி (59), மாமியார் சின்ன பொண்ணு, மனைவியின் அக்காள் ராஜேஸ்வரி ஆகியோர் அவரிடம் தகராறு செய்தனர்.
இதில் ஆத்திரம் அடைந்த பழனி, மருமகன் செல்வத்தை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த செல்வம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனி, சித்ரா, சின்ன பொண்ணு, ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த தகராறில் ராஜேஸ்வரியின் மகள் அகிலாவை தாக்கியதாக செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.