மதுரை : மதுரை சோழவந்தான் அருகே காதலை கைவிட மறுத்த மகளை சராமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
மதுரை சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முரளி விவசாய கூலி வேலை செய்துவரும் நிலையில் திருமணமாகி மனைவி, இருமகள்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது மூத்த மகளான 17 வயது மாணவி அப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததால், அவர்கள் காதலை ஏற்காமல் கைவிடுமாறு அறிவுரை கூறியுள்ளனர். இதனால், மாணவிக்கும், அவரது தந்தை முரளிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முரளி அவரது மகளை கத்தியால் சராமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த மாணவி ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தப்பியோடிய அவரது தந்தை முரளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.