சேலம் அருகே +2 மாணவி மற்றும் அவரது தம்பியை கொடூரமாக கொலை செய்து தலைமறைவான சித்தப்பாவை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் தும்பல் பட்டி பஞ்சாயத்து ஒடுவன் காடு பகுதியில் ராஜா என்பவரின் குழந்தைகள் பள்ளியில் பயிலும் அண்ணன் தங்கை இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: சித்தப்பாவை கழுத்தை நெறித்துக்கொன்ற அண்ணன் மகன்…!! மதுபோதையில் உளறியதால் வெளியான திடுக்கிடும் தகவல்…!
தனது சொந்த சித்தப்பா தனசேகரன் என்பவர் இந்த கொலையை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வந்துள்ளது.
தனசேகனுக்கும் ராஜாவுக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று மாலை வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதால் தனசேகரன் ராஜாவை பலமாக தாக்கியுள்ளார்.
அப்போது தடுக்க வந்த ராஜாவின் இரண்டு குழந்தைகளையும் தனசேகரன் என்பவர் கொடூரமாக கழுத்தை அறுத்தும் வெட்டியும் படுகொலை செய்துள்ளார் .
மனதை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக பனமரத்துப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த காயமடைந்த ராஜாவும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தப்பி ஓடிய கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர் சொத்துக்காக பிஞ்சு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.