Categories: தமிழகம்

ஓபிஎஸ் – இபிஎஸ் பிளவால் பாஜக, திமுகவுக்கு சாதகமான சூழல்… சசிகலா அதைப்பற்றி பேசுவதற்கு தகுதியே இல்லை : கே.சி.பழனிசாமி பளார்!!

ஓபிஎஸ் இபிஎஸ் பிளவால் பாஜக மற்றும் திமுகவுக்கு சாதகமான சூழல் அமையும் வாய்ப்புள்ளதாக கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் கே.சி பழனிச்சாமி தலைமையில் அஇஅதிமுக எதிர்கால தொண்டர்களின் உரிமை பாதுகாத்திட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒற்றை தலைமை லஞ்ச ஊழல், சாதி மத அப்பாற்பட்ட அதிமுக புரட்சித்தலைவி எம்ஜிஆர் அவர்களின் எழுதிய உயிலின்படி அவரது தொண்டர்களால் அதிமுக வழி நடத்திட வேண்டும், ஒருங்கிணைந்த அதிமுக உருவாக்க வாருங்கள் என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் முன்னாள் எம்.பியும் எம்.எல். ஏ.வுமான கே.சி. பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.பி.யும் எம்எல்ஏ.வுமான கே.சி பழனிச்சாமி கூறுகையில், அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் ஒற்றை தலைமை பிளவினால் அதிமுக தொண்டர்கள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர்.

அதிமுக உட்கட்சி பிளவின் காரணமாக மதவாத சக்திகள் தற்பொழுது அதிமுக கையில் கொண்டு வருகின்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமைப் பொறுப்பு ஏற்று பின்னர் கூட்டணி கட்சியில் அதிமுகவுக்கு ஒரு சில இடங்கள் மட்டுமே வழங்க நிலைமை ஏற்படும்.

இதனை தடுக்கும் விதத்தில் எம்ஜிஆர் வழியில் லஞ்ச லாபம் இல்லாத உண்மையான அதிமுக தொண்டர்கள் ஒன்றரை கோடி தொண்டர்கள் மத்தியில் முறையாக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் தற்பொழுது இபிஎஸ், ஓபிஎஸ் ஒற்றைத் தலைமைக்காக போட்டி போட்டுக் கொண்டு இருப்பது வேதனை அளிப்பதாக கூறினார்,.

தொடர்ந்து இபிஎஸ் பொதுச் செயலாளராகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இருந்து வந்த நிலையில் தற்பொழுது வழக்குகளில் போட்டி போடுவது மட்டுமே குற்றத்திலிருந்து தப்பிக்க இவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓபிஎஸ் ஆக இருந்தாலும் இபிஎஸ் ஆக இருந்தாலும் சசிகலாவாக இருந்தாலும் யார் வேண்டுமானாலும் தொண்டர்கள் வழியில் தொண்டர்கள் செல்வாக்கைப் பெற்று பொதுச் செயலாளராக ஆகலாம் எனவும் அவர் தெரிவித்தார் மேலும் பேசியவர் அதிமுக உட் கட்சியில் ஓபிஎஸ் இபிஎஸ் ஜாதி பார்வை, லஞ்சம், ஊழல் செய்யும் நபர்களுக்கு சீட்டு வழங்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என குற்றம் சாட்டினார்.

ஓபிஎஸ், இபிஎஸ் பிளவு பட்டதால் பாரதிய ஜனதா கட்சிக்கும் திமுக கட்சிக்கும் சாதகமாக அமைய சூழல் உருவாக்கியுள்ளது. இதனை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா ஆகியோர்கள் மூலம் உருவாக்கப்பட்ட அதிமுக தற்பொழுது அதிமுக சின்னம்,கொடி முடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் ஜெயிலுக்கு போய் குற்றம் சாட்டப்பட்டவரான சசிகலா ஒற்றை தலைமை ஏற்க வந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு அவருக்கு அந்த தகுதி இல்லை அதை உண்மையான தொண்டர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

10 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

11 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

11 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

12 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

12 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

12 hours ago

This website uses cookies.