வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – போலீசாரை பார்த்து பயந்து தப்பிப்பதற்காக தரகர் ஒருவர் எட்டி குதித்ததில் காலில் பலத்த அடி.
கோவை துடியலூர் சேரன் காலனியில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலத்தில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான 7 பேர் கொண்ட லஞ்ச ஓழிப்புத் துறை போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
அலுவலக மெயின் கேட் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பூட்டப்பட்டு சோதனை நடைபெற்றது. அலுவலகத்தில் இருந்த யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவிடவில்லை.
அந்த அலுவலகத்தில் ஆர்.டி.ஓ சிவகுருநாதன் உட்பட போக்குவரத்து அலுவலர்கள், தரகர்கள் உள்ளிட்டவர்கள் உள்ளே இருந்ததாக தெரிகிறது.
அதில் பழனிச்சாமி என்கிற தரகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தப்பித்துக் கொள்வதற்காக மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற கூறப்படுகிறது. மேலும் அலுவலகத்திற்குள் 8 தரகர்கள் இருந்ததாக தெரிகிறது.
அவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறையினர் இது குறித்து அறிக்கை வெளியிட்ட பின்பே எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, யார் யார் கைது செய்யப்படுகிறார்கள், என்பது குறித்து தெரியவரும்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.