வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனையடுத்து, இந்தப் புயலால் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே, குறிப்பாக காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று (நவ.30) கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் ஃபெஞ்சல் புயல் (Fengal Cyclone) இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் 21 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், இன்று பிற்பகல் புயல் கரையைக் கடக்கும்போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலையில் (OMR Salai) பொதுப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் புயல் கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதை தவிர்த்து, பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும், நேற்று இரவு முதல் சென்னை முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: காலிங் பெல் அடித்ததும் காணாமல் போன தாலிச்செயின்.. தனியாக இருப்பவர்களே உஷார்!
அதேநேரம், சென்னை புறநகர் ரயில் சேவை வழக்கம்போல் இயங்கி வருகிறது. அதேநேரம், பிற்பகல் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், மாலை வேளையில் கடக்கும் என்றும், மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் எனவும் கூறப்படுகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.