தஞ்சை அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறின் போது திமுக கவுன்சிலர் உள்பட 2 பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் கிருபானந்தம் என்பவர் அப்பகுதியில் திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் தனது நண்பர் அப்பு என்பவருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு கவுன்சிலர் கிருபானந்தத்திற்கும், அங்கிருந்த சில நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்பு ஆகிய இருவரையும், வாக்குவாத்தில் ஈடுபட்ட எதிர் தரப்பினர் அரிவாளால் தாக்கியுள்ளனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். காயமடைந்தவர்களை அருகே இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்புவை அரிவாளால் வெட்டிய திருவையாறு பகுதியைச் சேர்ந்த துளசிராமன், நடேசன், அருண், சதீஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட வாய்த்தகராறில் திமுக கவுன்சிலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.