தஞ்சை அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறின் போது திமுக கவுன்சிலர் உள்பட 2 பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் கிருபானந்தம் என்பவர் அப்பகுதியில் திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் தனது நண்பர் அப்பு என்பவருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு கவுன்சிலர் கிருபானந்தத்திற்கும், அங்கிருந்த சில நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்பு ஆகிய இருவரையும், வாக்குவாத்தில் ஈடுபட்ட எதிர் தரப்பினர் அரிவாளால் தாக்கியுள்ளனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். காயமடைந்தவர்களை அருகே இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்புவை அரிவாளால் வெட்டிய திருவையாறு பகுதியைச் சேர்ந்த துளசிராமன், நடேசன், அருண், சதீஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட வாய்த்தகராறில் திமுக கவுன்சிலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.