கோவை சைபர் கிரைம் அலுவலக பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாமக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், கணபதி அடுத்த புதூரைச் சேர்ந்தவர் அசோக் ஸ்ரீநிதி (35). இவர் பாமக நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், “யூடியூப் சேனல் மூலம் ஒருவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் துரிதப்படுத்தினர்.
இந்த விசாரணையின் முடிவில், இது தொடர்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்பவரைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர் ஜாமீன் மூலம் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில், நேற்று கோவை மாநகர சைபர் கிரைம் அலுவலகத்துக்கு அசோக் ஸ்ரீநிதி வந்து உள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு கொலை மிரட்டல்.. திமுக நிர்வாகி மீது தவெக பரபரப்பு புகார்!
அப்போது, அங்கிருந்த பெண் உதவி ஆய்வாளர் சுகன்யாவிடம், “முகமது இப்ராஹிம் மீது ஏன் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யவில்லை? அவர் ஏன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்?” எனக் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து அவர், அந்த வழக்கின் சில ஆவணங்களைக் கிழித்து எறிந்ததாகவும் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், பெண் உதவி ஆய்வாளர் சுகன்யாவை தகாத வார்த்தைகளால் பேசியும், கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர், இது குறித்து பெண் உதவி ஆய்வாளர் சுகன்யா ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இந்தப் புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.