தமிழகம்

சரமாரிக் கேள்வி கேட்ட இளைஞர்.. பத்திரிகையாளர்களை படம் பிடிக்க கூடாது என ஆவேசமடைந்த நிதியமைச்சர் நிர்மலா!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, ஊஞ்சபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

பின்னர் மேடையில் பேசிய நிர்மலா சீதாராமன் கரப்சன் இல்லாமல் நடந்து வரும் அரசு மோடி அரசு பொதுமக்கள் பணத்தை பொதுமக்களுக்காக செலவிடும் அரசு மோடி அரசு. மத்திய அரசின் நிதியோடு தூத்துக்குடி துறைமுகம் சிறப்பாக இருந்து வருகிறது. முன்பு ஒரு குடும்பத்திற்கு மட்டும் நாட்டின் வரிப்பணம் சென்று கொண்டிருந்தது.

இப்போது நாட்டின் வரிப்பணத்தில் முன்னேற்ற திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வருகிறது. மோடி அரசில் வரும் வரி பணம் அனைத்து தரப்பினருக்கும் செல்கிறது. இந்திரா காந்தி காலம் ராஜீவ்காந்தி காலம் எந்த காலத்திலும் மூன்று முறை பிரதமர் இருந்ததில்லை பிரதமர் மோடி மூன்று முறை பிரதமராக இருந்து வருகிறார்.

பலதரப்பட்ட மக்களுக்கு நேரடியாக உறுப்பினர் அட்டையை வழங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார். விழா முடிந்து கிளம்பும்போது திருமண மண்டபத்திற்கு அருகே உள்ள பொதுமக்களின் வீட்டிற்கே சென்று பாரதிய ஜனதா கட்சியின் சேர்ந்தமைக்காக, உறுப்பினர் அட்டையை வீட்டின் திண்ணையில் அமர்ந்து வழங்கினார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பும்போது அருண் சந்திரன் என்ற பட்டதாரி இளைஞர், நிர்மலா சீதாராமனிடம் செல்போன் உதிரி பாகமான செமி கண்டக்டர் என்ற உதிரிபாகத்தை வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆவேசமடைந்த நிர்மலா சீதாராமன் அந்த இளைஞரிடம் இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள குறிப்புகளை படித்து தெரிந்து கொண்டு அதன்பின் டெல்லி வந்து சந்தித்து நேரடியாக விவாதம் செய்து கொள்ளலாம் அதற்கு நான் தயார் என்று அந்த இளைஞரிடம் தெரிவித்தார்.

மீண்டும் அந்த இளைஞர் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் இடம் பல்வேறு கேள்விகளை கேட்க முற்பட்டார். இதனால் கோபம் அடைந்த நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்களை ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என எச்சரித்தார்.

அதன் பிறகு அருண் சந்திரனிடம் இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது என பாஜகவினர் எச்சரித்தனர். இதனை அடுத்து போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் காவல்துறையின் பல்வேறு உளவுபிரிவு சார்ந்த போலீசார் இளைஞரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

இதனை அடுத்து அந்த இளைஞரை போலீசார் ஒரு மணி நேரம் கழித்து விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

22 minutes ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

13 hours ago

சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!

பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…

14 hours ago

தோனி சிக்ஸர் ரொம்ப முக்கியமா..கோட்டை விடும் CSK..முன்னாள் வீரர் காட்டம்.!

CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…

15 hours ago

இது தானா..எதிர்பார்த்த நாளும் இதுதானா..நடிகை திரிஷா போட்டோ வைரல்..ரசிகர்கள் வாழ்த்து.!

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…

16 hours ago

AK ‘God Bless U’ மாமே..அட்டகாசமாக வெளிவந்த Second லிரிக் வீடியோ.!

அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…

17 hours ago

This website uses cookies.