பழனி முருகன் கோவிலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கால் இடறிய சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வருகை தந்தார். ரோப் கார் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்ற அவர், ரோப்காரில் இருந்து சுமார் 20 படிக்கட்டிகள் ஏறி சென்று உச்சியை அடைந்தபோது, கால்மிதி மேட் தடுக்கியதில் கால் இடறி தடுமாறினார்.
பிறகு, சுதாரித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றார். பின்னர், ஆனந்த விநாயகரை கும்பிட்டு விட்டு மூலவரை தரிசிக்க ரக்கால பூஜையில் கலந்து கொள்ள உள்ளே சென்றார்.
இந்த நிலையில் சமீப காலமாக தமிழக அரசியல் வட்டாரத்தில் நிதி அமைச்சர் பேசிய ஆடியோ ஒன்றை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. நிதி அமைச்சர் பழனி கோவிலுக்கு வரும் போதேல்லாம் தடங்கல் ஏற்பட்டு வருகிறது. கடந்த முறை பழனி கோவிலுக்கு நிதி அமைச்சர் வருகை தந்த போது திடீரென மின்சாரம் தடை பட்டு ரோப்காரில் அந்தரத்தில் சிறிது நிமிடங்கள் தொங்கினார்.
தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் அமைச்சரவை மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், நிதி அமைச்சர் முதல்வரை நேரில் சந்தித்து ஆடியோ குறித்த விளக்கம் கொடுத்ததாக தகவல்கள் வெளியானது.
மேலும் தீவிர முருக பக்தர் ஆன நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பழனி கோவிலில் தொடர்ந்து தடங்கல் ஏற்பட்டு வருகிறது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.