சோளிங்கா் சுமதி மினி திரையரங்களில் பயங்கர தீவிபத்து தியரங்கு முழுவதும் எரிந்து சாம்பலாகியது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் வாலாஜா சாலையில் சுமதி திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கம் பின் பகுதியில் முற்றிலும் குளிா்சாதன வசதியுடன் கூடிய சுமதி மினி திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கில் தற்பொழுது யானை திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
நேற்று இரவு வழக்கமாக 12.30 மணிக்கு இரவு காட்சி முடிந்து அனைவவரும் வெளியே சென்றதும் ஊழியர்கள் திரையரங்கை சுத்தம் செய்துவிட்டு பூட்டி சென்றுள்ளனா்.
இந்நிலையில் திடீரென திரையரங்கில் தீப்பற்ற துவங்கியுள்ளது. இதை கண்ட இரவு காவலாளி இது குறித்து சோளிங்கா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினா் தீயை அனைக்க போராடி வந்த நிலையில், மளமளவென எரிந்த தீயால் திரையரங்கம் முழுவதும் பரவத் தொடங்கியது.
இதில், தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால், அதற்குள் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீா் தீா்ந்தததால் அரக்கோணத்தில் இருந்து கூடுதலாக மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனா்.
அதிா்ஷ்டவசமாக, திரைப்படம் முடிந்து அனைத்து பார்வையாளர்களும் வெளியேறிய நிலையில், இரவு நேரத்தில் இந்த தீ விபத்து நடந்ததால் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.