சோளிங்கா் சுமதி மினி திரையரங்களில் பயங்கர தீவிபத்து தியரங்கு முழுவதும் எரிந்து சாம்பலாகியது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் வாலாஜா சாலையில் சுமதி திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கம் பின் பகுதியில் முற்றிலும் குளிா்சாதன வசதியுடன் கூடிய சுமதி மினி திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கில் தற்பொழுது யானை திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
நேற்று இரவு வழக்கமாக 12.30 மணிக்கு இரவு காட்சி முடிந்து அனைவவரும் வெளியே சென்றதும் ஊழியர்கள் திரையரங்கை சுத்தம் செய்துவிட்டு பூட்டி சென்றுள்ளனா்.
இந்நிலையில் திடீரென திரையரங்கில் தீப்பற்ற துவங்கியுள்ளது. இதை கண்ட இரவு காவலாளி இது குறித்து சோளிங்கா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினா் தீயை அனைக்க போராடி வந்த நிலையில், மளமளவென எரிந்த தீயால் திரையரங்கம் முழுவதும் பரவத் தொடங்கியது.
இதில், தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால், அதற்குள் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீா் தீா்ந்தததால் அரக்கோணத்தில் இருந்து கூடுதலாக மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனா்.
அதிா்ஷ்டவசமாக, திரைப்படம் முடிந்து அனைத்து பார்வையாளர்களும் வெளியேறிய நிலையில், இரவு நேரத்தில் இந்த தீ விபத்து நடந்ததால் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.