திண்டுக்கல் : திண்டுக்கல் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் இரவு பணியின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அடுத்த பித்தளை பட்டியைச் சேர்ந்தவர் வித்யாபதி (48). இவர் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலராக உள்ளார். வழக்கம் போல் நேற்று இரவு பணிக்கு வந்தார். இந்நிலையில் இன்று காலை தீயணைப்பு நிலையத்தில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த சக ஊழியர்கள் இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இவருக்கு இந்திரா என்ற மனைவியும், திவ்யதர்ஷினி(24) என்ற மகளும், தட்சிணாமூர்த்தி(19) என்ற மகனும் உள்ளனர். திவ்ய தர்ஷினி இன்று நடைபெறும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத சென்று விட்ட காரணத்தினால் தந்தை இறப்பு குறித்து அவருக்கு தெரியாது. மேலும் திவ்யதர்ஷினிக்கு இன்று பிறந்த நாள் ஆகும். இந்த சம்பவம் தீயணைப்புத்துறை காவலர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.