சாத்தூர் அருகே தீப்பெட்டி பேக்கேஜிங் கம்பெனியில் தீ விபத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் பொருட்கள் கருகி சேதமடைந்தன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள சடையம்பட்டி கிராமத்தில் உள்ள பாலசுப்ரமணியன் என்பவரது மனைவி பேபி ராணி (வயது 45) என்பவருக்கு சொந்தமான மாதா தீப்பட்டி பேக்கேஜிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது.
இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளில் இருந்து தீக்குச்சிகளை வாங்கி தீப்பெட்டி பண்டல்களாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை தீக்குச்சி மூடைகள் அடுக்கி வைத்த அறையில் மூடைகள் சரிந்து விழுந்ததில் தீக்குச்சிகள் உரசி தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தீக்குச்சி மூடைகள் மற்றும் பக்கத்து அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 400க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் 2 இயந்திரங்கள் உட்பட அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பெட்டி பேக்கேஜிங் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
நிதியைக் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, வாங்க வேண்டியது இவர்களின் உரிமை என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.…
குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி…
This website uses cookies.