Categories: தமிழகம்

குளங்களை பொது ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் வலைகளுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..!!

கோவை: மீனவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கையில் மீன் பிடிக்கும் வலைகள் மற்றும் மீன்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு குளங்களை பொது ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு 1-1-2019 முதல் 31.12.2023 வரை ஐந்து ஆண்டு காலத்திற்கு மீன் பாசி குத்தகை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் குளங்களை பொது ஏலம் விட போவதாக மாவட்ட கலெக்டருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் சங்கத்தில் உள்ள 761 மீனவ உறுப்பினர்களின் குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். எனவே குளத்தை பொது ஏலம் விட கூடாது. நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாக பேசி மீனவர்களுக்கு வழிவகை செய்து வாழ்வாதாரம் பாதிக்காமலிருக்க மீனவர்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

11 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

12 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

13 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

13 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

14 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

14 hours ago

This website uses cookies.