Categories: தமிழகம்

குளங்களை பொது ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் வலைகளுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..!!

கோவை: மீனவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கையில் மீன் பிடிக்கும் வலைகள் மற்றும் மீன்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு குளங்களை பொது ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு 1-1-2019 முதல் 31.12.2023 வரை ஐந்து ஆண்டு காலத்திற்கு மீன் பாசி குத்தகை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் குளங்களை பொது ஏலம் விட போவதாக மாவட்ட கலெக்டருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் சங்கத்தில் உள்ள 761 மீனவ உறுப்பினர்களின் குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். எனவே குளத்தை பொது ஏலம் விட கூடாது. நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாக பேசி மீனவர்களுக்கு வழிவகை செய்து வாழ்வாதாரம் பாதிக்காமலிருக்க மீனவர்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

58 minutes ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

2 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

4 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

4 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

5 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

6 hours ago

This website uses cookies.