திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் காட்டுப்பள்ளி எல்என்டி தனியார் துறைமுகத்தை கப்பல்கள் நுழையும் பகுதியில் 40க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழவேற்காடு பஜார் பகுதியில் தனியார் நிறுவனம் தமிழக அரசிடம் உறுதியளித்த 1500 வேலைவாய்ப்புகளை உடனடியாக வழங்க வேண்டும், 250 பேருக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், இதற்கு அரசு உரிய முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி மீனவப் பெண்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பழவேற்காடு பஜார் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் மீனவ பெண்கள் மற்றும் மீனவர் சங்க கூட்டமைப்பினருடன் பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியும், ஏற்காமல் இன்று தொடர்ந்து நான்காவது நாளாக மீன்பிடிக்க செல்லாமல் அப்பகுதி முழுவதும் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராடி வருகின்றனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதனிடையே, படகுகளில் சென்று எல்என்டி மற்றும் அதானி தனியார் துறைமுகங்களுக்கு மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் சென்று கப்பல்கள் நுழையாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.