கேரளாவில் 13 வயதில் இருந்து சுமார் 5 வருடங்களாக 64 பேரால் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பத்தனம்திட்டா: சமீபத்தில், மஹிளா சமக்யா எனப்படும் என்ஜிஓ அமைப்பினர், தங்களது வழக்கமான வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது, கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியில் இளம்பெண் ஒருவரைச் சந்தித்து உள்ளனர். அப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்து 8 மாதங்களே ஆகிறது.
இந்த நிலையில், கடந்த 5 வருடங்களாக சுமார் 64 பேர் இப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, குழந்தைகள் நல அமைப்பினர் பள்ளி மூலம் வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில், தான் ஒரு தடகள வீராங்கனை என அவர் தெரிவித்து உள்ளார்.
என்னுடைய 13 வயதில் இருந்து எனது அண்டை வீட்டார் முதல் சுமார் 64 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளதாகக் கூறிய அப்பெண், தன்னிடம் மொபைல் போன் இல்லை என்றும், தன்னுடைய தந்தையின் போனில் சுமார் 50 நபர்களின் மொபைல் எண்கள் உள்ளதாகவும் கூறி உள்ளார்.
தடகள வீராங்கனையாக இருக்கும் நிலையில், பயிற்சி நேரங்கள், விளையாட்டு முகாம்கள், போட்டி நடக்கும் இடங்கள், ஆசிரியர்கள், சக மாணவர்கள் என பலரும் என்னுடைய அந்தரங்க வீடியோவை எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வதாக அதிர்ச்சிகரமான செயலை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ‘இதனால்’ தான் நான் காமெடியன் ஆனேன்.. திடீரென மாறிய வடிவேலு முகம்!
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலில் கவுன்சிலிங் வழங்க பரிந்துரைத்த குழந்தைகள் நல அமைப்பு, இது குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளனர். இதன்படி, போக்சோ உள்பட வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்த போலீசார், இதுவரை 5 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், இதில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் நபர் ஏற்கனவே சிறையில் உள்ளதாகவும், அது மட்டுமல்லாமல் 10 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்து வருவதாகவும் பத்தனம்திட்டா போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…
உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
2026 தேர்தலுக்கு மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தால், அண்ணாமலையை தலைமைப் பொறுப்பில் இருந்து எடுக்க அதிமுக வலியுறுத்தி வருவதாக…
கோவையில், கள்ளக்காதலில் இருந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம்,…
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
This website uses cookies.