மேட்டுப்பாளையம் அருகே மாம்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் குளிக்க சென்ற மூன்று கல்லூரி மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் பத்து பேர் இன்று மேட்டுப்பாளையம் அருகே உள்ள வினோபாஜி நகர் மாம்பட்டி என்ற இடத்திற்கு பவானி ஆற்றில் குளிப்பதற்கு வந்துள்ளனர்.
பத்து பேரும் பவானி ஆற்றில் ஓரத்தில் உள்ள சிவகுமார் என்பவரது தோட்டத்தினுள் புகுந்து பவானி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலையில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த பத்து மாணவர்களும் வெள்ளத்தில் சிக்கிகொண்டனர்.
இதில் ஏழு பேர் மரக்கிளைகளையும் செடி கொடிகளை பற்றி தப்பினர் இருப்பினும் சுரேந்திரன், கணீஸ்க்கர், ராஜதுரை ஆகிய மூன்று மாணவர்கள் பவானி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதனையடுத்து இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்து செல்லபட்ட மாணவர்களை தேடி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.