திருவாரூர் மாவட்டம் காட்டூரில் இயங்கி வரும் ஆண்டவர் டீ ஸ்டால் என்கிற தேநீர் கடையில் விற்கப்படும் தேநீரின் சுவை மாறுவதாகவும் மேலும் கசப்பு தன்மையுடன் இருப்பதாகவும்,இந்த கடையில் கலப்பட டீ தூள் பயன்படுத்துவதாகவும் திருவாரூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு வந்த புகார் வந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமையில் அதிகாரிகள் இந்த கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இந்த கடையில் பயன்படுத்தப்பட்ட டீத்துளின் தரத்தை அறிந்து கொள்வதற்காக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குளிர்ந்த நீரில் டீத்தூளை போட்டு பரிசோதித்தனர்.
இதில் நீரில் அதிக சாயம் இறங்கியது. மேலும் இந்த தேநீர் கடையில் நிறத்திற்காக இரண்டு வெவ்வேறு நிறுவனங்களின் டீத்தூளை கலந்து பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்தது. மேலும் தேனீர் கடை நடத்துவதற்கான உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து அந்த தேநீர் கடையில் பயன்படுத்தப்பட்ட டீத்தூளின் மாதிரிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். உரிய சோதனை நடத்தப்பட்ட பின்பு கலப்பட தூள் பயன்படுத்தியது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
This website uses cookies.