கோவை வடவள்ளி நவாவூரை சேர்ந்தவர் துரைசாமி, 78. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் லாலிரோட்டில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அலுவலக அதிகாரி வெங்கடேஷ் ஆய்வு செய்தார்.
கடை லைசன்ஸ் காலவதியாகி இருந்தது. லைசன்ஸ் புதுப்பித்து தர, 20 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக வெங்கடேஷ் கேட்டுள்ளார். பின் பேரம் பேசி, 7 ஆயிரம் ரூபாயாக குறைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த துரைசாமி கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய, 7 ஆயிரம் ரூபாயை துரைசாமியிடம் கொடுத்து அனுப்பினர். இதனை வெங்கடேஷ் நேரடியாக வாங்காமல் புரோக்கர் பிரதாப் என்பவரை வாங்க சொன்னார்.
அவர் பால் கம்பெனி அருகே வைத்து அந்த பணத்தை வாங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரதாப்பை கைது செய்து, வெங்கடேசையும் கைது செய்தனர். பின் போலீசார் இருவரது வீடுகளிலும் சோதனை நடத்தினர்.
இதில் பிரதாப் வீட்டில் ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் லால் வெனா, லஞ்சம் வாங்கி கைதான வெங்கடேசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.