Categories: தமிழகம்

தமிழகத்தில் முதன்முறை.. பனைமரம் வெட்டியவர் மீது FIR பதிவு : ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு சிக்கல்!

தமிழகத்தில் முதன்முறை.. பனைமரம் வெட்டியவர் மீது FIR பதிவு : ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு சிக்கல்!

தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது திருவாரூர் மாவட்டத்தில் பனை மரங்களை வெட்டிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது…

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா குன்னலூர் ஊராட்சியில் கீழ சேத்தி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி அவர்களின் கணவர் பூமிநாதன் என்பவர் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறாமல் மயான பராமரிப்பு பணிகளுக்காக இந்து சமய அறநிலைத்துறை கீழ் உள்ள நிலத்தில் உள்ள பனை மரங்களை வெட்டியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் நேரில் சென்று விசாரணை நடத்தி அதன் பிறகு பார்த்திபன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடையூர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.

இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள பனை மரங்களை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறாமல் வெட்டிய குற்றத்திற்காக 427 பிரிவின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது

தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது முதல் தகவல் அறிக்கையை திருவாரூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச் சேரி ராஜா கூறுகையில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், குன்னலூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பூமிநாதன் மீது தமிழகத்தின் மாநில மரம் பனையை வெட்டிய குற்றத்திற்காக எடையூர் காவல் துறையினர் – வருவாய் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்து முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளனர்.

இதுக்குறித்து பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் “தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண்மைக்கான தனி நிதி அறிக்கையில் அறிவித்திருந்தும் பனை மரங்களை வெட்டி வீழ்த்தும் அவலநிலை தொடர்வதால் தமிழக அரசு உடனடியாக அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதத்தில் அரசாணை பிறப்பிக்க வேண்டுமென வேண்டுகோள் வைப்பதாக தெரிவித்துள்ளார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்

வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…

3 minutes ago

‘இனி நம்மல யாருமே பிரிக்க முடியாது’.. தண்டவாளத்தில் கட்டி அணைத்தவாறு தற்கொலை செய்த காதல் தம்பதி!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…

21 minutes ago

ராமதாஸ் முடிவுக்கு எதிராக போர்க்கொடி.. அன்புமணிக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…

42 minutes ago

பூப்படைந்த பட்டியலின மாணவிக்கு தனியார் பள்ளியில் அரங்கேறிய அவலம்.. அதிர்ச்சி வீடியோ!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…

1 hour ago

கோவைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்!

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…

2 hours ago

எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…

வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…

2 hours ago

This website uses cookies.