புதுச்சேரி : புதுச்சேரியில் வேட்டையாடி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரிய வகை பறவைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி வனத்துறையினருக்கு சொந்தமான வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் அரியவகை பறவைகள் உட்பட கொக்கு , கிளி, மைனா உள்ளிட்ட பறவைகள் வேட்டையாடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கூடப்பாக்கம், ஓதியம்பட்டு உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது கூடப்பாக்கம் பகுதிகளில் கொக்கு உள்ளிட்ட அரிய வகை பறவைகள் வேட்டையாடப்பட்டு சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது வனத்துறை அதிகாரிகளை பார்த்ததும் விற்பனை செய்தவர்கள் தப்பியோடி விட்டனர்.
தொடர்ந்து அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 25 க்கும் மேற்பட்ட நத்தைகுத்தி நாரை, ஆள்காட்டி குருவி, உன்னி கொக்கு, அரிவாள் மூக்கன் , கொக்குகள் ,மைனா, பச்சை கிளிகளை அதிகாரிகள் கைப்பற்றி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அரிய வகை பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்பவர்கள மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
This website uses cookies.