தமிழகம்

கலங்கி நின்ற விவசாயி.. கூண்டோடு வந்த வனத்துறை.. கோவையில் தொடரும் சிறுத்தை அச்சம்!

கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள முருகன்பதி, பழைய மந்தை தோட்டத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை ஒன்று நேற்று இரவு கொடூரமாக தாக்கிக் கொன்றுள்ளது.

முன்னதாக, தங்கராஜ் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவும் ஆடுகளை தோட்டத்தில் கட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர், இன்று காலை ஆடுகளைப் பார்க்க வந்தபோது, ஒரு ஆடு சிறுத்தையால் தாக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், சிறுத்தையின் கால் தடங்கள் சம்பவ இடத்தில் காணப்பட்டதால், இது சிறுத்தையின் தாக்குதலாக இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகித்தனர். இதனையடுத்து, இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, அங்குள்ள கால் தடங்களை ஆய்வு செய்து, இது சிறுத்தையின் தாக்குதல் தானா என்பதனை உறுதி செய்து அதனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினரால் அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

இதையும் படிங்க: வருங்கால CM புஸ்ஸி ஆனந்த்.. கைவிரித்த ECR சரவணன்.. நடந்தது என்ன?

அதேநேரம், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும், தங்கள் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

5 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

6 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

6 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

6 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

7 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

7 hours ago

This website uses cookies.