தர்மபுரி: ஓசூர் அருகே மாடுகளை தாக்க வந்ததாக ஒற்றை காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் பனைமரம் மேற்கு காப்புக்காட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இறந்து கிடந்ததை ரோந்து பணிக்கு வனத்துறையினர் பார்த்துள்ளனர்.
அதனையடுத்து கால்நடை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்த, பின் யானையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், திம்மன் தொட்டிகிராமத்தை சேர்ந்த விவசாயி மாரப்பன் என்பவர் நாட்டுத் துப்பாக்கியால் காட்டு யானையை சுட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் பட்டியில் வளர்த்து வரும் மாடுகளை பெண் காட்டு யானை தாக்க வந்ததால், துப்பாக்கியால் சுட்டதை அவர் ஒப்புகொண்டுள்ளார். மேலும், சுட்டதும் காட்டுப்பகுதிக்குள் சென்ற சிறிது நேரத்தில் யானை இறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மாரப்பனிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு, அவரை வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.