தமிழகம்

இப்டியே போனா எதிர்கட்சி மட்டும் தான்.. மீண்டும் அதிமுகவில் குழப்பம்!

கருத்து வேறுபாடு இருந்ததால்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

திருச்சி: கட்சியைப் பலப்படுத்தும் விதமாகவும், நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையிலும் அதிமுக முக்கிய தலைவர்களைக் கொண்ட கள ஆய்வுக் குழுவை அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்தார். இதன்படி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில அதிமுக கள ஆய்வுக் கூட்டம் இன்று (நவ.19) நடைபெற்றது. அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மேடையில் பேசினார்.

அப்போது அவர், ” எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். அதன் அடிப்படையில்தான் உங்களுடன் நாங்கள் கலந்துரையாட வந்துள்ளோம். ஆனால், அதிமுக நிர்வாகிகளாகிய நீங்கள், கவனமின்றி, பொறுமையின்றி இருக்கிறீர்கள் என்பதைப் பார்த்து சற்று வருத்தமாக இருக்கிறது.

இப்படியே இருந்தால் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எதிர்கட்சியாகவே இருக்க வேண்டியது தான். கருத்து வேறுபாடுகள் இருந்ததால்தான் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். நமக்குள் ஒற்றுமை இல்லை, எனவே, இனியாவது ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கட்சி என வந்து விட்டால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

நம் உடம்பில் ஓடுவது அதிமுக உதிரம். நிச்சயமாக 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ” நமது கட்சிக்குள் இருக்கும் குழப்பம் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றை பேசித் தீர்ப்போம்.

முடியவில்லை என்றால், அதை நமது பொதுச் செயலாளரிடம் (எடப்பாடி பழனிசாமி) கொண்டு செல்வோம். ஆபரேசன் செய்யவில்லை என்றால் வைத்தியம் செய்ய முடியாது. சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டும் என அனைவரும் முடிவு செய்து இருந்தபோது, அப்போது தான் தீர்ப்பு வந்து அவர் சிறை சென்றார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நம்பிக்கையான ஒருவரை தெய்வமே பார்த்துக் கொடுத்தது. அதேநேரம், செல்லாக் காசுகளால் எந்த ஒரு பயனும் இல்லை. எனவே, அது குறித்து யாரும் கவலைப்படாதீர்கள். ஓ.பன்னீர்செல்வத்திற்கு துரோகம் செய்தவர்கள் சசிகலாவும், தினகரனும் மட்டும் தான்” என்றார்.

முன்னதாக, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் சில காலங்கள் முதலமைச்சராக இருந்தார். அதன் பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட மோதல், சமரசம் செய்யப்பட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும் மாறினர். இதன் பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேல் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்.

இதையும் படிங்க: ஜிம்மில் அதிக வொர்க் அவுட்.. உடற்பயிற்சி கூட உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்!

இதனை அடுத்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக களம் கண்டு எதிர்க்கட்சியாக மாறியது. பின்னர் மீண்டும் ஏற்பட்ட அதிமுக விரிசலால், எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளராக மாறினார். அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை அடுத்து தேமுதிகவுடன் கூட்டணி வைத்து அதிமுக 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!

அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…

23 minutes ago

GBU படத்தால தூங்க கூட முடியல- பேட்டியில் வெளிப்படையாக புலம்பிய Darkkey

மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…

41 minutes ago

GBU படம் பார்க்க மகளுடன் வந்த ஷாலினி.. வீடியோ வைரல்!

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…

52 minutes ago

காதலனை திருமணம் செய்த மகள் கௌரவக் கொலை.. 6 மாத கருவை கலைத்து, சிறையில் தள்ளிய பெற்றோர்!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…

1 hour ago

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

17 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

18 hours ago

This website uses cookies.