Categories: தமிழகம்

முன்னாள் எம்.பி.வசந்தகுமாரின் பிறந்தநாள் : அகஸ்தீஸ்வரத்தில் எம்.பி விஜய் வசந்த் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சலி!!

கன்னியாகுமரி : கன்யாகுமரி பாராளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர்கள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்பி வசந்தகுமார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். அவர் காலமானதிற்கு பிறகு அவர் பிறந்த நாளான சித்திரை மாதம் 1-ம் தேதி ஒவ்வொரு வருடமும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் விழாவாகக் கொண்டாடி அவருடைய நினைவிடத்தில் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்துவருவது வழக்கம்.

அதனடிப்படையில் இந்த வருடம் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அகஸ்தீஸ்வரத்தில் அமைந்துள்ள வசந்தகுமார் நினைவிடத்தில் உள்ள மணிமண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை முதலே அப்பகுதிக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஊர் பொதுமக்களும் கூடத் தொடங்கினர். பின்னர் பகல் 12 மணி அளவில் வசந்தகுமார் எம்.பி யின் மகனும் தற்போதைய கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் எம்.பியுமான விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வசந்தகுமார் நினைவிடத்திற்கு வந்தனர்.

பின்னர் அங்கு நிறுவப்பட்டிருந்த வசந்தகுமார் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வசந்தகுமார் நினைவிடத்திற்கு வசந்தகுமாரின் மனைவி தமிழ்செல்வி, மகன்கள் விஜய் வசந்த் எம்.பி., வினோத் குமார் மகள் தங்கமலர் ஜெகநாத் மற்றும் குடும்பத்தினர்கள் சென்று மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களும் அப்பகுதி மக்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குமரி வசந்தகுமார் அதெலடிக் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல் வசந்தகுமார் நினைவிட மணி மண்டபம் வரை பள்ளி மாணவ மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டது.

பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வசந்தகுமார் எம்.பி.யின் மணி மண்டபம் அருகில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்த சமபந்தி விருந்தை விஜய்வசந்த் எம்.பி. துவக்கி வைத்தார். இந்த சமபந்தி விருந்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பிறந்தநாள் விழாவில் மாவட்ட காங்கிரஸ் சேவாதள பிரிவு தலைவர் ஜோசப் தயாசிங், வடக்கு வட்டார தலைவர் கால பெருமாள், தெற்கு வட்டார தலைவர் முருகேசன், அகஸ்தீஸ்வரம் நகரத் தலைவர் கிங்ஸ்லி, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி, அகஸ்தீஸ்வரம் பேரூர் திமுக செயலாளர் பாபு உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மாத இறுதியில் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…

4 minutes ago

Get out பதாகை.. பிரமாண்ட விருந்து.. புதிய அறிவிப்புகள்.. தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவின் Highlights!

தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…

49 minutes ago

குருட்டுப் பூனை.. Mental Checkup.. ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை!

முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…

2 hours ago

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

15 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

15 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

16 hours ago

This website uses cookies.